ரஜினியை பாராட்டிய தலைவர் பிரபாகரன்  

Posted by paris thiva in , , ,

இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முப்பது வருடமாக உங்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லையே? நீங்க ஆம்பிளைங்கதானா? என்றார் ஆவேசத்தோடு. ரஜினியின் இந்த பேச்சுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.



விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் பிரபாகரன் பேசிய விஷயங்கள் கொழும்பில் வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது- முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க... உங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா? என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது கூறியதன் மூலம் எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே பிரதிபலித்திருக்கிறார். எங்களுடைய தியாகங்கள் என்றைக்கும் வீண் போகாது என்று பிரபாகரன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Enter your email address: