தற்போதைய பதிவுகள்

பெட்டகம்

மறுமொழிகள்

தமிழ்மண நிர்வாகிகள் பதிவுகளின் தலைப்பை மட்டுறுக்க தொடங்கினாலும் தொடங்கினார்கள் அவனவன் எதிர் பதிவுகள் போடத்தொடங்கி தமிழ்மணத்தை சூடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பங்கிக்கும் ஏதாவது எழுதனுமே என்பற்காக இந்த பதிவு

தமிழ்வலைத் திரட்டிகளில் முன்னணியில் தமிழ்மணம் இருக்கிறது. அதிக வாசகர்களை வலைப்பதிவுக்கு கொண்டுவருவதும் தமிழ்மணம் தான். காரணம் மிக வேகமாக பதிவுகளை திரட்டுவதும் வலைப்பதிவர்கள் தம் தளத்திலிருந்தே பதிவுகளை சுலபமாக இணைக்கக் கூடியவாறு கருவிப்பட்டையை கொண்டிருப்பதுமாகும். தமிழில் தேன்கூடு, தமிழ்வெளி திரட்டி, தமிழூற்று போன்ற பல திரட்டிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி முன்னணியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறது தமிழ்மணம்.

ஆனால் தற்போது சின்னப்பிள்ளத்தனமான சில வேலைகளை தமிழ்மண நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். பதிவர்களின் சம்மதமில்லாமல் அவர்களுக்கு அறிவிக்காமல் அவர்களின் பதிவுகளின் தலைப்பை மட்டுறுத்துகின்றார்கள். கேட்டால் தமிழ்மணம் நாறுகிறது அதனால் வாசனையூட்டுகின்றோம் என்கிறார்கள்.

காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தலைப்பு வைத்தால் தமிழ்மணம் நாறிவிடுமாம். அப்படியானால் தற்போது என் மீது மூத்திரம் பெய்யுங்க, ஓண்ணுக்கடிக்க வாரிங்களா? என்று தமிழ்மணத்தில் தலைப்பு வருதே இப்போ நாறவில்லையா? அல்லது தமிழ்மணம் ஒண்ணுக்கடிக்கும் இடமா?

சில மாதங்களுக்கு முன் தமிழச்சி என்னும் சிறந்த பதிவர் ஒருவரை தமிழமண நிர்வாகிகள் தமிழ்மணத்தில் இருந்து நீங்கியது எல்லோரும் அறிந்ததே. காரணம் அவர் சில கெட்ட வார்த்தைகளை பதிவில் பாவிச்சாராம். இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. தமிழ்மணம் என்பது ஒரு பொதுத்திரட்டியா? அல்லது ஆளாளுக்கு ஏற்றபடி பதிவுகளை திரட்டுகிறதா? புதிய பதிவர்கள் ஏதாவது   எழுதினால் காச்சுமூச்சு என கத்தும் நிர்வாகம் பழைய பதிவர்கள் என்றால் மௌனமாக இருப்பது ஏன்?

ஒருவர் காமக்கதைகள் படிக்கணும் என்றால் தமிழ்மணத்துக்கு வந்துதான் படிக்கணும் என்றில்லை. அதற்கு எத்தனையோ தேடுபொறிகள் இருக்கின்றன. அதில் காமக்கதைகள் என்று எழுதி அழுத்தினால் போதும் கிளுகிளுப்பான எத்தனையோ கதைகள், விடியோ படங்களும் கிடைக்கும்.

இந்த இடத்தில் தமிழ்மணம் ஒன்றை யோசிக்கவேண்டும், பதிவர்கள் ஏன் அப்படி தலைப்பிடுகிறார்கள் என்று. இப்படி தலைப்பு வைப்பதற்கு தமிழ்மணமும் ஒரு காரணம். என்னடா இவன் இப்படி சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா?

அதாவது தமிழ்மணத்தில் பதிவர்களின் பதிவுகள் சில நிமிடங்களே முகப்பில் தெரிகிறது. அதன்பின் முகப்பிலிருந்து காணாமல் போயிவிடும். தொடர்ச்சியாக தெரியனுமென்றால் அது சூடான இடுகையில் இடம்பெறவேண்டும். சூடான இடுகைக்கு வர சூடான, கிளுகிளுப்பான தலைப்புகள் வைக்கவேண்டும். அப்படி வைத்தால் அதிக வாசகர் கவனத்தை கவர்ந்து சூடான இடுகையில் இடம்பிடித்துவிடும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் தலைப்புகள் எல்லாம் சூடாகின்றனவே தவிர எந்தவொரு பதிவரும் கிளுகிளு பாலான கதைகள் எழுதவேண்டுமென்று ஒரு போதும் நினைப்பதில்லை.

பல பதிவர்களை உருவாக்கிறது தமிழ்மணம். அப்படியான தமிழ்மணத்தின் தற்போதைய போக்குகள் பதிவர்களின் மனதில் வெறுப்பை உண்டாக்கி விடக்கூடாது.

இனி கவனிக்க வேண்டியவை

1. தமிழ்மணத்தில் இருந்து சூடான இடுகைகள் பகுதியை நீங்க வேண்டும். சூடான இடுகையில் இடம்பிடிக்கத்தான் பதிவர்கள் தலைப்பை சூடாக வைக்கிறார்கள். அப்படி ஒன்று இல்லாவிட்டால் சூடான தலைப்புகள் வைக்க தேவையில்லாமல் போய்விடும்.


2. பதிவர்களின் பதிவுகள் தமிழ்மணத்தில் அதிகநேரம் தெரியும்படி செய்யவேண்டும்.

3. பதிவுகளின் தலைப்புகளை மட்டுறுக்கவோ, பதிவர்களை நீங்கவோ முன்னர் அவர்களுக்கு அறிவிக்கவும்.

4. பதிவர்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு தயவுசெய்து பதில் அனுப்பவும்.


இனி வலைப்பதிவர்களுக்கு சில வரிகள்.



1. சூடான இடுகையில் இடம்பெறவேண்டும் என்பற்காக பதிவு எழுதாதீர்கள். உங்கள் எழுத்து மற்றவர்களை கவருமிடத்து சூடான இடுகை இல்லாமலே உங்களின் தளத்திற்கு வாசகர்கள் வருவார்கள்.

2. உங்களின் பதிவுகள் சில வேளைகளில் சிறுவர்களை கூட கவரலாம் என்பதை மனதில் வைத்து தகாத வார்த்தைகளை தவிர்க்கலாம்.

3. தமிழ்மணமே கதி என்று இருக்காமல் மற்ற திரட்டிகளுக்கும் இணைப்புக் கொடுத்து அவர்களையும் ஊக்குவித்தால் எதிர்காலத்தில் தமிழ்மணம் போல பல திரட்டிகளை உருவாக்கலாம்.
 
இவை அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் குறிவைத்து எழுதவில்லை. இது பற்றிய உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்க.

12 மறுமொழிகள்

  1.  

    தமிழ்மணம் வாழ்க..
    பாரிஸ் திவா வாழ்க...

  2. பெயரில்லா  

    //இவை அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் குறிவைத்து எழுதவில்லை. இது பற்றிய உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்க.//
    உண்மை இது தான். பலரும் சொல்லத்தயங்கிய ஒன்றை ஒருத்தர் சத்தமாக சொன்னார். ஆனால் அவர் பிரச்சினைக்குறிய ஆள் என்பதால் அவர் சொன்ன அதாவது பதிவர்களுக்கு அவர் தம் நலம் விரும்பி சொன்ன விசயத்தை திரித்து குழப்புவதாக கண்டுபிடிப்பளர் சொல்ல இவரும் பதிலுக்கு சத்தம் போட பிரச்சினை பெரிதாகி வெடித்திருக்கிறது. அதே சமயம் நீங்கள் சொல்லும் கருத்துக்கு பலரும் உடன்பட்டாலும் எங்கே நாளை நாமும் தூக்கப்படுவோமோ என்று பயம் இருக்கிறது பலருக்கும். பாருங்கள். உங்கள் தைரியம் எனக்கிருந்தால் நான் ஏன் அனானியாக இதை எழுதுகிறேன்? எல்லாம் பயம். நின்னால் பயம் எழுதினால் பயம் பின்னூட்டினால் பயம். தெனாலி போல எங்கள் நிலைமை. மொக்கைச்சாமியே சரணம்

  3. கொழுவி  

    காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தலைப்பு வைத்தால் தமிழ்மணம் நாறிவிடுமாம். அப்படியானால் தற்போது என் மீது மூத்திரம் பெய்யுங்க, ஓண்ணுக்கடிக்க வாரிங்களா? என்று தமிழ்மணத்தில் தலைப்பு வருதே இப்போ நாறவில்லையா?//

    இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ?
    பின்னையவற்றை அனுமதித்திருப்பதால் முன்னையவற்றையும் அனுமதிக்கணுமா? அல்லது முன்னையவற்றை தணிக்கை செய்ததால் பின்னையவற்றையும் தணிக்கை செய்ய வேண்டுமா?

  4. கொழுவி  

    ஆகா என்பின்னூட்டத்தோடு ஒரு கேள்வியிட்டேனே.. காணலையே.. எனக்கு அறிவிக்காமலேயே மட்டுறுத்தியாச்சா..

    சரி.. அதை நான் ஒரு பதிவா போட்டு விடுகிறேன்.

  5.  

    // அதிஷா said...
    தமிழ்மணம் வாழ்க..
    பாரிஸ் திவா வாழ்க... //


    நன்றி அதிஷா

  6. பாரிஸ் திவா  

    // Anonymous said...
    உங்கள் தைரியம் எனக்கிருந்தால் நான் ஏன் அனானியாக இதை எழுதுகிறேன்? //


    தட்டிக்கொடுப்பதும் தட்டிக்கேட்பதும் பதிவர்கள் கடமை

  7. பாரிஸ் திவா  

    // கொழுவி said...
    ஆகா என்பின்னூட்டத்தோடு ஒரு கேள்வியிட்டேனே.. காணலையே.. எனக்கு அறிவிக்காமலேயே மட்டுறுத்தியாச்சா..//

    அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது

  8. பெயரில்லா  

    //தமிழச்சி என்னும் சிறந்த பதிவர்//

    சிரிப்பு சிரிப்பா வர்தே

  9. கொழுவி  

    அது இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாதது //

    ஒருவேளை தமிழ்மணமும் தனக்கு பொருந்தாதவற்றை மட்டுறுத்துகிறதோ என்னமோ.. ? என்ன சொல்றீங்க.. ?

  10. பெயரில்லா  

    எனக்கு ஒன்று மட்டும் புரியல, தமிழ்மணம் தடைக்கல்லா இருந்தா (நீங்க மட்டுமில்ல, தமிழ்மணத்த திட்டற எல்லோரும்) அதன் பட்டைய ஏன் இன்னும் உங்க பதிவுல வெச்சுருக்கீங்க :-P
    - மணி

  11.  

    // Anonymous said...
    எனக்கு ஒன்று மட்டும் புரியல, தமிழ்மணம் தடைக்கல்லா இருந்தா (நீங்க மட்டுமில்ல, தமிழ்மணத்த திட்டற எல்லோரும்) அதன் பட்டைய ஏன் இன்னும் உங்க பதிவுல வெச்சுருக்கீங்க :-P
    - மணி //

    தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் மணி. நான் ஒன்றும் தமிழ்மணத்திற்கு எதிரானவன் அல்ல. சில தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளேன். அவ்வளவுதான்

  12. பெயரில்லா  

    சரியான நேரத்தில் சரியான கருத்தை சொன்ன தங்களின் பதிவை தமிழ்மணம் மறைக்கலாம்

கருத்துரையிடுக

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
பாரிஸ் திவா
நேற்று என்பது இறந்து போனது. நாளை என்பது நிச்சயமில்லாதது. இன்று, இந்த நிமிடம் மட்டுமே உண்மையானது.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

சூடான இடுகைகள்

முதல் 10 மறுமொழியாளர்கள்