சிகரட் பிடிப்பதை தடுக்க புதியமுறை  

Posted by paris thiva in , ,

ஜப்பானில் பள்ளி மாணவ மாணவியர்கள் சிகரெட் பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஜப்பானிய அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனளிக்காத நிலையில் தற்போது புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி சிகரெட் விற்பனைக்கு கமெரா பொருத்தப்பட்ட தானியங்கி மெசின்கள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


இவை "பேஷியல் ரெகக்னேஷன்’ முறையில் 20 வயதிற்கு குறைவானவர்களை கண்டு பிடித்து அவர்கள் இடும் பணத்தை வெளியே தள்ளிவிடும். "பேஷியல் ரெகக்னேஷன்’ முறையில் இந்த மெசின்களில் பொருத்தப்பட்டுள்ள கமெரா தன்முன் நிற்கும் மனிதரின் முகம், எலும்பு வளர்ச்சி, தோல் முதிர்ச்சி போன்றவற்றை துல்லியமாக உள்வாங்கி உள்ளே இருக்கும் கணினிக்கு அனுப்புகிறது. கணினி அவற்றை சரிபார்த்து 20 வயதிற்கு மேற்பட்டவர் என்று உறுதி செய்தால் தான் தானியங்கி இயந்திரம் காசை உள்வாங்கிக் கொண்டு சிகரெட் பெட்டியை வெளியே தள்ளும்.

இதன் முதற்கட்டமாக பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆராட்சிக்கு உட்படுத்தப்பட்டனர். முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படும் இளைஞர்களையும், இளமையான தோற்றத்துடன் காணப்படும் முதியவர்களையும் இனம் கண்டு கொள்வது இந்த மெசின்களின் சிறப்பம்சமாகும்

திருகோணமலைத் தாக்குதல் ஏன்?  

Posted by paris thiva in ,

இம்மாதம் 10ம் திகதி அதிகாலை 2.23 மணிக்கு திருகோணமலை கடற்பரப்பில் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் எம்.வி.இன்விசிபிள் கப்பல் ஏன் தாக்கப்பட்டது? இக்கப்பல் அழிக்கப்பட்டதால் விடுதலைப் புலிகளுக்கு என்ன நன்மை? தாக்கப்பட்ட கப்பலில் என்ன இருந்தது? இது அனைவரது மனதிலும் எழுந்த கேள்விகள். இதற்கான காரணங்களை ஆராய முன் இக்கப்பல் எப்படி இலங்கை கடற்படைக்கு வந்தது என்று பார்க்கலாம்.

2003 ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலி நோக்கி புறப்பட்ட எம்.வி.இன்விசிபிள் கப்பலை இலங்கை கடற்படை வழிமறித்து காலித் துறைமுகத்தில் தடுத்து வைத்திருந்தது. அந்த கப்பல்தான் பின்னர் கடற்படைக்கான போர் கப்பலாக மாற்றப்பட்டது. அதன் பின் இக்கப்பல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆழ்கடல் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதுடன் வடபகுதி இராணுவத்திக்கான ஆயுத வினியோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளது கடல் நடவடிக்கைகளுக்கு இக்கப்பல் பெரும் இடையூறாக இருந்ததுடன் புலிகளின் சில கப்பல்களை தாக்கியழித்தது. இவை கப்பல் மீது விடுதலைப் புலிகளின் பார்வை திரும்ப ஒரு காரணமாக இருக்கலாம்.

கப்பல் தாக்கப்பட்ட பின்னர் வெற்றுக் கப்பலையே புலிகள் தாக்கினார்கள் என்று பாதுகாப்பு அமைச்சும், 10 பேர் வரை இருந்தார்கள் என்று கடற்படையும் மாறி மாறி முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்திருப்பது கப்பலில் ஏதோ பெறுமதி மிக்க ஒன்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது. அது என்னவென்று பார்க்கும் முன் கப்பல் எப்படி தாக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும்.

கப்பல் தாக்கப்பட்ட தினமானது கிழக்கில் தேர்தல் நடைபெற்ற தினமாகும். தேர்தலின் போது விடுதலைப் புலிகளால் ஏதாவது ஆகலாம் என்றபடியாலோ என்னவோ கிழக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையை அரசு குவித்திருந்தது. இத்தனை பாதுகாப்பையும் மீறி விடுதலைப் புலிகள் ஒரு வெற்றுக் கப்பலை தாக்கியழிக்க முன்வரமாட்டார்கள்.

சென்ற மாதம் வடபோர் முனையில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட பாகிஸ்தான் ஆயுதம் வழங்கியிருக்கலாம் (சில நாட்களுக்கு முன் இராணுவ தளபதி பாகிஸ்தான் சென்றுவந்தது ஏன்?) அவற்றை வடபகுதிக்கு கொண்டு செல்ல இக்கப்பல் தான் பயன்படுத்தப்படும் என்பது புலிகளுக்கு நல்லாவே தெரியும். ஆனால் இத்தாக்குதலானது முன்னைய தாக்குதல்களை விட வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது வரைக்கும் கடலின் மேலாக வந்து தாக்கிய புலிகள் இப்போது கடலுக்கடியாலும் வரத் தொடங்கிவிட்டார்கள். இனி கடற்படை கடலுக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்த எந்த நாட்டிடம் கையேந்தப் போகிறதோ?

அதிகாலை 2.23 தாக்குதல் நடந்த நேரத்தில் இருந்து சுமார் 10-15 நிமிடங்களுக்குள் கப்பல் கடலில் மூழ்கி விட்டதாம். வெற்றுக்கப்பல் ஒன்று வெடிவைத்துத் தகர்க்கப்பட்டால் அது கடலில் மூழ்க 1 மணி நேரமாவது தேவைப்படும். ஆனால் இக்கப்பல் 10-15 நிமிடங்களில் மூழ்கியதற்கு காரணம் கப்பலில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் நிரப்பப்பட்டிருக்கலாம், தாக்குதலின் போது அவைகளும் சேர்ந்து வெடித்து கப்பல் சுக்கு நூறாகியிருக்கலாம், இதனால் கப்பல் வேகமாக மூழ்கியிருக்கலாம். எது எப்படியோ தமக்கு இடைஞ்சலாக இருந்து வந்த கப்பலை விடுதலைப்புலிகள் தாக்கியழித்து விட்டனர்.

Enter your email address: