30 வருடங்களிற்கு மேலான தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் பாரிய பொருளாதார இழப்பினை சிறீலங்கா அரசானது அடைந்துள்ளது. இப் பொருளாதார இழப்பினை சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்கள் பெருமளவில் ஈடுசெய்கின்றது.
இவ்வாறு சிறீலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் முக்கிய பயனாளர்களாக இருப்பவர்கள் தமிழீழத் தமிழர்கள். தமிழீழத் தமிழர்களை இனவழிப்புச் செய்யும் சிறீலங்காவின் பொருட்கள் சேவைகளை நுகர்வதன் மூலம் தமிழர்களை அழிப்பதற்கான நிதியினை சிறீலங்கா அரசிற்கு வழங்கிக் கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கனடாலில் 'சிறீலங்காவைப் புறக்கணிப்போம்' போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் சிறீலங்கா பொருட்கள் எரிக்கப்பட்டன.




0 comments:
Post a Comment